சிவசக்தி மாரியம்மன் கோயிலில் பால்குட திருவிழா

 

பெரம்பலூர், ஜூலை 22: துறைமங்கலம் சிவசக்திமாரி யம்மன் கோயிலுக்கு ஆடி ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு பக்தர்கள் பால்குடம், முளைப்பாரி எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட துறைமங்கலம் கே.கே நகர் பகுதியில் சிவசக்தி மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு பால்குடம் எடுக்கும் விழா நேற்று நடைபெற்றது.  ஆடி முதல் ஞாயிறையொட்டி நடைபெற்ற பால்குடதிருவிழாவை யொட்டி பக்தர்கள் ராஜேஸ்வரி அம்மன் கோயிலிலிருந்து பால்குடம் எடுத்துக்கொண்டு தலையில் சுமந்தபடி அந்தப் பகுதியை சுற்றிவந்து, கோயிலை வந்தடைந்தனர். பின்னர் அம்மனுக்கு பால் அபிஷேகம் நடைபெற்றது நிகழ்ச்சியில் சிவசக்தி மாரியம்மன் பக்தர்கள் நூற்றுக்கணக் கானோர் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.

The post சிவசக்தி மாரியம்மன் கோயிலில் பால்குட திருவிழா appeared first on Dinakaran.

Related Stories: