9 வயது மகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட தந்தை போக்சோ சட்டத்தில் கைது

வேலூர், ஜூலை 4: வேலூரில் மகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட தந்தையை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். வேலூரில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் செல்வகுமார்(32). இவருக்கு திருமணமாகி மனைவியும், இரு பெண் குழந்தைகள் உள்ளன. இவர் கட்டிட கலை சிற்பியாக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் 5ம் வகுப்பு படிக்கும் 9ம் வயதுடைய மகளிடம், கடந்த ஓராண்டாக வீட்டில் யாரும் இல்லாதபோது செல்வகுமார் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் தந்ைதயின் இந்த செயல் குறித்து தனது அம்மாவிடம் சிறுமி தெரிவித்துள்ளார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவரது தாய் இதுகுறித்து வேலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜகுமாரி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார். மேலும் குடியாத்தம் பகுதியில் பதுங்கியிருந்த செல்வகுமாரை மடக்கி பிடித்து, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

The post 9 வயது மகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட தந்தை போக்சோ சட்டத்தில் கைது appeared first on Dinakaran.

Related Stories: