உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து மனைவி தற்கொலை காப்பாற்ற முயன்ற கணவர் காயம் பேரணாம்பட்டு அருகே

பேரணாம்பட்டு, ஜூன் 29: உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி மனைவி தீவைத்து தற்கொலை செய்து கொண்டார். அவரை காப்பாற்ற முயன்ற கணவருக்கு தீக்காயம்ஏற்பட்டது. பேரணாம்பட்டு அடுத்த மேல்பட்டி காவல் நிலையத்துக்கு உட்பட்ட ராஜாக்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் அஸ்லாம் பாஷா(50). ஆடு மேய்க்கும் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி சர்புன்பீ(45). இவர் அடிக்கடி வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் சர்புன்பீ பல்வேறு மருத்துவமனைக்கு சென்றும் குணமாகவில்லையாம். இதனால் விரக்தியடைந்த அவர் நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்த மண்ணெண்ணெய்யை உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.

அவரது அலறல் சத்தம் கேட்டு வந்த அஸ்லாம் பாஷா தீயை அணைக்க முயற்சித்தார். இதனால் அவர் மீதும் தீப்பற்றியது. இருவரும் தீயில் எரிந்து கொண்டிருப்பதை கண்ட அக்கம் பக்கத்தினர் தண்ணீர் ஊற்றி அணைத்தனர். ஆனால் சர்புன்பீ பலத்த தீக்காயங்களுடன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அஸ்லாம் பாஷாவை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தகவலறிந்த மேல்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் குப்பன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சர்புன்பீன் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து மனைவி தற்கொலை காப்பாற்ற முயன்ற கணவர் காயம் பேரணாம்பட்டு அருகே appeared first on Dinakaran.

Related Stories: