கல்லூரி மாணவர் உட்பட 2 பேர் கைது கர்நாடகா மதுபாக்கெட்டுகள் பதுக்கி விற்ற

குடியாத்தம், ஜூலை 6: குடியாத்தம் அடுத்த கொண்டசமுத்திரம் பகுதியில் கர்நாடக மாநில மதுபாக்கெட்டுகளை மொத்தமாக வாங்கி வந்து சில்லறையில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சப்- இன்ஸ்பெக்டர் பத்மநாபன் மற்றும் போலீசார் நேற்று அப்பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, கர்நாடக மாநில மதுபாக்கெட்டுகளை விற்றுக்கொண்டிருந்த தனியார் கல்லூரி மாணவன் அண்ணாமலை(23), அதே பகுதியை சேர்ந்த பைக் மெக்கானிக் சரண்குமார்(23) ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும், விற்பனைக்காக வைத்திருந்த 81 மதுபாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.

The post கல்லூரி மாணவர் உட்பட 2 பேர் கைது கர்நாடகா மதுபாக்கெட்டுகள் பதுக்கி விற்ற appeared first on Dinakaran.

Related Stories: