டிஎஸ்பியிடம் உறுதிமொழி பத்திரம் வழங்கிய சாராய வியாபாரிகள் ‘இனி சாராயம் காய்ச்ச மாட்டோம்’

குடியாத்தம், ஜூன் 28: ‘இனி சாராயம் காய்ச்ச மாட்டோம்’ என சாராய வியாபாரிகள் உறுதிமொழி பத்திரத்தை டிஎஸ்பியிடம் வழங்கினர். ேவலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த சாத்கர் கிராமத்தை சேர்ந்தவர்கள் சுமன்(38), செல்வமூர்த்தி (36). பிரபல சாராய வியாபாரிகளான இருவரும் சாராய விற்பனை வழக்கில் பல்வேறு முறை சிறைச்சென்றுள்ளனர். மேலும், குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்துள்ளனர். இந்நிலையில் கள்ளக்குறிச்சி விஷச்சாராய பலிகள் தொடர்ந்து பேரணாம்பட்டு பகுதியில் போலீசார் தொடர்ந்து சாராய வேட்டை நடத்தி சாராய வியாபாரிகளை கைது செய்து விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தி வருகின்றனர். அதன் எதிரொலியாக, சுமன் மற்றும் செல்வமூர்த்தி ஆகியோர் குடியாத்தம் அடுத்த காந்தி நகரில் உள்ள டிஎஸ்பி அலுவலகத்திற்கு நேற்று நேரில் சென்று இனி சாராயம் காய்ச்ச மாட்டோம் என்ற உறுதிமொழி பத்திரத்தை டிஎஸ்பி ரவிச்சந்திரனிடம் வழங்கினர். மனம் திருந்தி உறுதிமொழி பத்திரம் வழங்கியவர்களை போலீசார் பாராட்டி அனுப்பி வைத்தனர்.

The post டிஎஸ்பியிடம் உறுதிமொழி பத்திரம் வழங்கிய சாராய வியாபாரிகள் ‘இனி சாராயம் காய்ச்ச மாட்டோம்’ appeared first on Dinakaran.

Related Stories: