முன்னாள் துணை கலெக்டர் மயங்கி விழுந்து சாவு வேலூர் கலெக்டர் அலுவலகத்தில்

வேலூர், ஜூலை 5: வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் முன்னாள் துணை கலெக்டர் மயங்கி விழுந்து உயிரிழந்தார். வேலூர் சத்துவாச்சாரி பேஸ்-2 சேர்ந்தவர் வெங்கடேசன்(89), ஓய்வுபெற்ற துணை கலெக்டர். இவர் நேற்று காலை ஓய்வூதியம் பெறுவதற்காக உயிர்வாழ் சான்றிதழ் புதுப்பிக்கும் பணிக்காக கலெக்டர் அலுவலகத்தில் கருவூலகத்திற்கு வந்தார். பின்னர், பி பிளாக்கில் 4வது மாடியில் உள்ள ஆர்டிஓ அலுவலகத்திற்கு சென்றார். அங்குள்ள இருக்கையில் அமர்ந்திருந்தபோது திடீரென அவர் மயங்கி கீழே விழுந்தார். இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அலுவலக ஊழியர்கள், அவரை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் சுகாதார பணிகள் துணை இயக்குனர் அலுவலகத்தில் இருந்து டாக்டர் மற்றும் செவிலியர்களை வரவழைத்து சிகிச்சை அளித்தனர். ஆனால் சிறிது நேரத்திலேயே வெங்கடேசன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அவரது குடும்பத்தினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து வெங்கடேசனின் சடலத்தை மீட்டு வேலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சத்துவாச்சாரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

The post முன்னாள் துணை கலெக்டர் மயங்கி விழுந்து சாவு வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் appeared first on Dinakaran.

Related Stories: