பெரம்பலூர் அருகே அரணாரை ஏரியில் மீன்பிடி திருவிழா

 

பெரம்பலூர்,ஏப்.21: அரணாரை ஏரியில் மீன்பிடி திருவிழா நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர். பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட அரணாரை கிராமத்தின் மேற்கு பகுதியில் சிறுகுளம் போல் ஒரு ஏரி உள்ளது. மிகக் குறைந்த அளவே நீர்ப்பிடிப்பு கொண்ட இந்த ஏரியில், ஆண்டுதோறும் தண்ணீர் வற்றுவதற்கு முன்பாக ஏரியில் உள்ள மீன்களை பிடிப்பது வழக்கம்.இதன்படி பருவமழை பொய்த்து கடும் வெப்பத்தால் நீர்நிலைகள் வறண்டு வரும் நிலையில், நேற்று அரணாரை ஏரியில் மீன்பிடித் திருவிழா நடைபெற்றது.

இதனையொட்டி அரணாரை கிராமத்து பொதுமக்கள் மட்டுமின்றி அருகில் உள்ள விளாமுத்தூர், நொச்சியம், பெரம்பலூர், செஞ்சேரி உள்ளிட்ட சுற்று வட்டார கிராமப்புற பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் திரண்டு வந்து, சிறுசிறு வலைகள், கத்தா மற்றும் துணிகளை, கொசு வலைகளை கொண்டு மீன்களை பிடித்தனர்.அதில் கெளுத்தி,கெண்டை, அயிரை மீன் வகைகள் கிடைத்தன. இதில் 2 கிலோ, 3 கிலோ எடை கொண்ட மீசைக்கெளுத்தி, ஜிலேபி கெண்டை மீன்கள் பிடிபட்டதால் பொதுமக்கள், இளைஞர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

 

The post பெரம்பலூர் அருகே அரணாரை ஏரியில் மீன்பிடி திருவிழா appeared first on Dinakaran.

Related Stories: