கரூரில் கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்துறை சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

கரூர், பிப். 28: கரூரில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தொடர் காத்திருப்பு போராட்டம் நேற்று தொடர்ந்து நடைபெற்றது. கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே இந்த தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் அன்பழகன் தலைமையில் நடைபெற்ற இந்த காத்திருப்பு போராட்டத்தில் கூட்டமைப்பின் அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

பொதுமக்களுக்கான பணியை சிறப்பாக மேற்கொள்ள, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையில் அனைத்து காலிப்பணி இடங்களையும் காலமுறை ஊதியத்தில் நிரப்பிட வேண்டும். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தேர்வு செய்யப்படும் கிராம நிர்வாக அலுவலர்களின் கல்வித்தகுதியை பட்டப்படிப்பாக நிர்ணயம் செய்திட வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

 

Related Stories: