கரூர் பகுதியில் குடியிருப்புகளின் அருகே வளர்ந்த சீத்த முட்செடிகள்

 

கரூர், பிப். 10: கரூர் மாநகராட்சிக்குட்பட்ட குடியிருப்புகளை ஒட்டி வளர்ந்துள்ள சீத்த முட்செடிகளை விரைந்து அகற்ற மாநகராட்சி நர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரூர் மாநகராட்சியில் 48 வார்டுகள் உள்ளன. இந்த வார்டு பகுதிகளில் தாந்தோணிமலை, சணப்பிரட்டி, வேலுசாமிபுரம், இனாம்குளத்துர், ராயனுர் போன்ற பகுதிகளில் அதிகளவு குடியிருப்புகள் உள்ளன. மேலும், தாந்தோணிமலையில்தான் அதிகளவு அரசு அலுவலங்கள் உளளது. எனவே, தாந்தோணிமலை, ராயனூர் போன்ற பகுதிகளில் குடியிருப்புகளின் எண்ணிக்கை அதிகளவில் உள்ளன.

Related Stories: