இதனை அங்கிருந்தவர்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இந்த வீடியோ சமூக வளைதளத்தில் வைரலாக மாறியது. இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பரபரப்பான விவாதமாக மாறியுள்ளது. இந்த கொடூரத்தில் ஈடுபட்ட பெண் காவலர்களை உடனடியாக சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்று ஏபிவிபி தலைவர்கள் கோரிக்கை விடுத்தனர். ஆட்சிக்கு வந்து ஒரு மாதத்தை கடப்பதற்குள் மாணவர்கள் மீது தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இதனை ஏபிவிபி சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம். இதுகுறித்து பி.ஆர்.எஸ். கட்சி எம்.எல்.சி. கவிதா தனது எக்ஸ் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார். மகளிர் ஆணையம் இதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
The post பல்கலை. நிலத்தில் உயர்நீதிமன்றம் கட்ட எதிர்த்து மறியல் பைக்கில் அமர்ந்தபடி மாணவியின் தலைமுடியை இழுத்து சென்ற போலீசார் appeared first on Dinakaran.