15 நாட்களுக்குப் பிறகு வெளிநாட்டு பயணத்தை முடித்துக்கொண்டு நேற்று முன்தினம் இரவு லண்டனில் இருந்து புறப்பட்ட ஜெகன் மோகன் தம்பதியினர் நேற்று காலை கன்னவரம் விமான நிலையம் வந்தடைந்தனர். ஜெகன் மோகனை விமான நிலையத்தில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்றனர். அங்கிருந்து குண்டூர் மாவட்டம் தாடேபள்ளியில் உள்ள முதல்வர் முகாம் இல்லத்துக்கு சென்றார். அதன் பிறகு வரும் 4ம் தேதி வாக்கு எண்ணும் நாளில் என்ன செய்வது என்பது குறித்து கட்சித்தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
The post லண்டன் பயணம் முடிந்து ஆந்திரா திரும்பிய முதல்வர் ஜெகன்மோகன்: கட்சி தலைவர்களுடன் ஆலோசனை appeared first on Dinakaran.