நேற்று முன்தினம் ஒரேநாளில் 64,115 பேர் சுவாமி தரிசனம் செய்தனர். இவர்களில் 32,711 பேர் தலைமுடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.23 கோடியை பக்தர்கள் உண்டியலில் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். இந்நிலையில் நேற்று காலை நிலவரப்படி வைகுண்டம் கியூ காம்பளக்சில் உள்ள அனைத்து அறைகளும் நிரம்பி, சுமார் சிலாதோரணம் வரை 3 கிமீ. தூரம் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். இதனால் பக்தர்கள் 24 முதல் 30 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.
The post கோடை விடுமுறையில் அலைமோதும் கூட்டம் திருப்பதியில் 30 மணிநேரம் காத்திருந்து சுவாமி தரிசனம்: 3 கி.மீ. தூரம் நீண்ட பக்தர்கள் வரிசை appeared first on Dinakaran.