எம்.பி ஸ்வாதி தாக்கப்பட்ட விவகாரம் கெஜ்ரிவால் உதவியாளருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்: டெல்லி நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: ஆம் ஆத்மி மாநிலங்களவை உறுப்பினர் ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்ட விவகாரத்தில் பிபவ் குமாருக்கு 14 நாள் நீதிமன்ற காவல் விதித்து டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆம் ஆத்மி மாநிலங்களவை உறுப்பினர் ஸ்வாதி மாலிவால் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டில் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக முதல்வரின் தனி உதவியாளர் பிபவ் குமார் கடந்த 18ம் தேதி கைது செய்யப்பட்டார். இதைதொடர்ந்து இதுதொடர்பான வழக்கை விசாரித்த டெல்லி தீஸ் ஹசாரி பெருநகர மாஜிஸ்திரேட் மாவட்ட நீதிமன்றம், பிபவ் குமாரை மே 31ம் தேதி (நேற்று) வரை போலீஸ் காவலில் வைக்க முன்னதாக உத்தரவிட்டிருந்தது.

மேற்கண்ட வழக்கு டெல்லி தீஸ் அசாரி பெருநகர மாஜிஸ்திரேட் மாவட்ட நீதிமன்ற நீதிபதி கௌரவ் கோயல் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, மாநிலங்களவை உறுப்பினர் ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்ட விவகாரத்தில் பிபவ் குமாருக்கு 14 நாள் நீதிமன்ற காவல் விதித்தார். இதையடுத்து போலீஸ் பேருந்து மூலம் அழைத்து செல்லப்பட்ட பிபவ் குமார் திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

 

The post எம்.பி ஸ்வாதி தாக்கப்பட்ட விவகாரம் கெஜ்ரிவால் உதவியாளருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்: டெல்லி நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: