மேற்கண்ட மனு உச்ச நீதிமன்ற கோடைக்கால சிறப்பு அமர்வு நீதிபதிகள் சதீஷ் சந்திர சர்மா மற்றும் பிரசன்ன பாலச்சந்திர வராலே ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், “இந்த விவகாரம் தொடர்பாக மனுதாரர் ஏன் முதலாவதாக உயர் நீதிமன்றத்தை அணுகாமல், நேரடியாக உச்ச நீதிமன்றத்தை நாடினார் என்பது கேள்வியாக உள்ளது. மேலும் இந்த மனுவை விடுமுறைக்கால சிறப்பு அமர்வு விசாரிக்க முகாந்திரம் இல்லை. அதேபோன்று தேர்தல் ஆணையத்துக்கும் எந்தவித உத்தரவும் பிறப்பிக்க முடியாது” என தெரிவித்த நீதிபதிகள், மனுவை தள்ளுபடி செய்தனர்.
The post பீகாரின் முங்கரில் மறுதேர்தல் நடத்தக்கோரிய மனு தள்ளுபடி appeared first on Dinakaran.