நாகையில்கொலை முயற்சி வழக்கில் சிக்கியவருக்கு குண்டாஸ்

நாகை, மே 16: நாகையில் கொலை முயற்சி வழக்கில் தொடர்புடைய வாலிபரை போலீசார் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்தனர். நாகை காடம்பாடி புதிய நம்பியார் நகர் சுனாமி குடியிருப்பை சேர்ந்தவர் ரவிக்குமார்(24). இவர் மீது நாகை உட்கோட்டத்தில் கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது. இந்நிலையில் நாகை வெளிப்பாளையம் போலீஸ் எல்லையில் கொலை முயற்சி வழக்கில் ஈடுபட்டார். இதையடுத்து அவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய நாகை எஸ்பி விஜயகுமார் பரிந்துரை செய்தார்.

இதையடுத்து கலெக்டர் சுரேஷ்குமார் உத்தரவின்படி ரவிக்குமாரை நேற்று முன்தினம் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

Related Stories: