திருவனந்தபுரம்: கேரள மாநிலம், திருவனந்தபுரம் அருகே உள்ள ஆற்றிங்கல் பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கும், கொல்லம் சடையமங்கலம் பகுதியை சேர்ந்த லைஷா (60) என்பவரின் மகன் ஷாலு சத்தியபாபு (36) என்பவருக்கும் கடந்த 2016ம் ஆண்டு டிசம்பரில் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த ஒரு சில மாதங்களிலேயே பேய் பிடித்திருப்பதாக கூறி அந்த இளம்பெண்ணை அவரது மாமியார் லைஷா, கொல்லம் அருகே நிலமேல் என்ற இடத்திலுள்ள மந்திரவாதியான அப்துல் ஜப்பார் (43) என்பவரிடம் அழைத்துச் சென்றுள்ளார். அவர் சில பூஜை செய்து இளம்பெண்ணை ஏர்வாடிக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதன்படி அவரை கணவர் ஷாலு சத்தியபாபு, அவரது தங்கை சுருதி, மாமியார் லைஷா, மந்திரவாதி அப்துல் ஜப்பார், அவரது உதவியாளர் சித்திக் ஆகியோர் ஏர்வாடிக்கு அழைத்து சென்றனர்.