மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ரவுடி கைது

சென்னை: சென்னை ஆயிரம் விளக்கில் 8-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ரவுடி தமிழ்ச்செல்வன் கைது செய்யப்பட்டுள்ளார். அநாகரிகமான செயலை தட்டிக் கேட்ட மாணவியின் பெரியம்மா மீது ரவுடி தாக்குதல் நடத்தியுள்ளார். மாணவி தரப்பில் அளித்த புகாரின் பேரில் 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்து ரவுடி தமிழ்ச்செல்வனை போலீசார் கைது செய்தனர். காவல் நிலைய குளியலறைக்கு சென்றபோது வழுக்கி விழுந்ததால் கை உடைந்து ரவுடிக்கு மாவுக்கட்டு போடப்பட்டுள்ளது.

The post மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ரவுடி கைது appeared first on Dinakaran.

Related Stories: