புதுடெல்லி: காங்கிரஸ் செய்தி ெதாடர்பாளராக இருந்த ரன்தீப் சிங் சுர்ஜேவாலாவின் பதவி பறிக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் செய்தி தொடர்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் (அமைப்பு) கே.சி.வேணுகோபால் வெளியிட்ட அறிக்கையில், ‘அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் (ஏஐசிசி) பொதுச் செயலாளரும், செய்தி தொடர்பாளருமான ரன்தீப் சிங் சுர்ஜேவாலாவுக்குப் பதிலாக, காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் செய்தி தொடர்பாளராக செயல்படுவார்.