சென்டிமென்டை மாற்றும் ரங்கசாமி

புதுச்சேரி முதல்வரான ரங்கசாமி, காங்கிரஸ் கட்சியிலிருந்து பிரிந்து பிப்ரவரி 7, 2011ல் என்.ஆர். காங்கிரஸ் கட்சியை தொடங்கினார். தனது தனித்துவமான எளிமை மற்றும் மக்கள் செல்வாக்கினால், கட்சி தொடங்கிய 45 நாட்களில் 2011 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று, புதுச்சேரி முதல்வராக பதவியேற்றார். அப்போது புதுவையில் சனி மூலை தொகுதியான காலாப்பட்டு தொகுதியில் உள்ள சுந்தரமூர்த்தி விநாயகர் கோயிலில் இருந்து பிரசாரத்தை தொடங்கி வெற்றி பெற்றார். தொடர்ந்து இதனை கடைபிடித்து வந்தார். தற்போது அந்த சென்டிமென்டை மாற்றுகிறார்.

தற்போது அவர் போட்டியிடும் தட்டாஞ்சாவடி தொகுதியில் உள்ள சனி மூலையில் இருந்து தனது முதல் பிரசாரத்தை கூட்டணி கட்சியினருடன் துவங்குகிறார். முதல் கட்டமாக தனது கட்சி வேட்பாளர்கள் தொகுதிகளில் பிரசாரம் செய்ய உள்ளார். பின்னர் தான் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு பிரசாரம் செய்ய உள்ளார். முதல்வரின் பிரசாரத்துக்காக அவரின் ராசி எண்ணாக கருதப்படும் 2349 என்ற எண்ணில் புதிய பொலிரோ ஜீப் வாங்கப்பட்டு அதனை பிரசார வாகனமாக மாற்றும் பணி நடந்து வருகிறது.

Related Stories: