சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக வனத்துறை செயற்கைக் கோள் மூலம் வனப்பகுதிகளை் கணக்கெடுத்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், தமிழ்நாட்டில் 2017 முதல் 2019 வரையிலான காலத்தில் அலையாத்தி காடுகளின் பரப்பளவு 4 சதுர கி.மீ அளவுக்கு குறைந்துள்ளது. திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பகுதியில் தான் மோசமான பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. ராமநாதபுரம், தஞ்சாவூர், நாகப்பட்டினம் மாவட்டங்களிலும் அலையாத்தி காடுகள் குறிப்பிடத்தக்க அளவில் அழிந்துவிட்டதாக தெரியவந்திருக்கிறது. முத்துப்பேட்டையில் 60 சத காடுகள் அழிந்துவிட்டன.