சேந்தமங்கலம்: நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் கடந்த ஒரு வாரமாக தொடர் மழை பெய்து வருகிறது. சீதோஷ்ண நிலை மாறியுள்ளதால் கடும் குளிர் காற்று வீசுகிறது. பலத்த மழையின் காரணமாக மண்ணில் ஈரப்பதம் அதிகரித்துள்ளது. இதனால் வனப்பகுதியில் ஆங்காங்கே மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது. கொல்லிமலையில் உள்ள காட்டாறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மரம், செடி, கொடிகள் தண்ணீரில் அடித்துச்செல்லப்பட்டது. அடிவாரம் காரவள்ளியில் இருந்து 70 கொண்டை ஊசி வளைவுகளுடன் கொல்லிமலைக்கு மலைப்பாதை செல்கிறது.