தமிழக நீராதாரங்களை பாதிக்கும் வகையில் செயல்படும் கேரள அரசை கண்டித்து அடுத்த மாதம் 13ம் தேதி திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே மூணாறு செல்லும் சாலையில் உள்ள சின்னாறு சோதனை சாவடியில் முற்றுகை போராட்டம் நடத்த உள்ளோம்.அத்துடன் கொங்கு மண்டல நீர் ஆதார உரிமை மீட்புக்குழுவையும் ஏற்படுத்தி, இந்த போராட்டம் தொடர்பாக விவசாயிகளிடம் விழிப்புணர்வையும் ஏற்படுத்த உள்ளோம். அதற்கு முன்பு முல்லை பெரியாற்றில் புதிய அணை கட்டும் கேரள அரசை கண்டித்து மதுரை வருமானவரித்துறை அலுவலகத்தை வரும் 28ம் தேதி முற்றுகையிட உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
The post புதிய அணை கட்டும் கேரள அரசை கண்டித்து அடுத்தடுத்து போராட்டம்: பி.ஆர்.பாண்டியன் அறிவிப்பு appeared first on Dinakaran.