இன்று மாலையுடன் கோடைவிழா நிறைவு பெறுகிறது. இந்நிலையில் அனைவரையும் கவர்ந்துள்ள மலர் கண்காட்சியை மேலும் நீட்டிக்க வேண்டும் என பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.
இதனையடுத்து மலர்கண்காட்சியை மட்டும் வரும் 30ம் தேதி வரை, 4 நாட்களுக்கு நீட்டித்து மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவி நேற்று அறிவித்தார். சேலம் புதிய பஸ் நிலையத்திலிருந்து தினமும் ஏற்காட்டை 300 ரூபாயில் சுற்றிப்பார்க்கும் சிறப்பு பேக்கேஜ் பஸ் வசதியும் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
The post ஏற்காட்டில் மலர்கண்காட்சி மேலும் 4 நாட்கள் நீட்டிப்பு appeared first on Dinakaran.