தூத்துக்குடி: சாத்தான்குளம் காவல் நிலையத்தில் மாற்றுத்திறனாளியை தாக்கிய புகாரில் மாவட்ட எஸ்.பி. பதிலளிக்க மாற்றுத்திறனாளிகள் நல ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. டிசம்பர் 3ல் இயக்கம் புகார் அளித்ததன் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சாத்தான்குளத்தில் மாற்றுத்திறனாளியை காவல்துறையை சேர்ந்தவர்கள் ஏற்கனவே அடித்து சித்தரவதை செய்திருப்பதாகவும், இது தொடர்பாக மாற்றுத்திறனாளிகள் ஆணையரகம் மாவட்ட எஸ்.பி க்கு விளக்கம் அளிக்க உத்தரவிட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் இயக்கத்தின் சார்பாக டிசம்பர் 3ம் தேதி தீபக் என்பவர் மாற்றுத்திறனாளிகள் ஆணையரகத்தில் ஒரு புகார் அளித்துள்ளார். அதில் அய்யாதுரை என்ற மாற்றுத்திறனாளியை எஸ்.ஐ.க்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன் ஆகியோர் தாக்கியதாக குறிப்பிட்டிருந்தார். அந்த அடிப்படையில் மாற்றுதிறனாளிகள் ஆணையராக உள்ள ஜான் சாம் வர்கீஸ் என்பவர் தற்போது மாவட்ட எஸ்.பி.க்கு கடிதம் ஒன்றினை எழுதியுள்ளார்.