விருதுநகர்,: விருதுநகர் அருகே சின்னபேராலியைச் சேர்ந்தவர் அழகர்சாமி என்ற அழகு பட்டாணி (65). திருநங்கை. விவசாய கூலித்தொழிலாளி. இவர், பெரியபேராலி ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்காக கிராம மக்களுடன், ஒன்றிய அலுவலகத்தில் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். திருநங்கை அழகு பட்டாணி கூறுகையில், ‘‘கிராம மக்களின் வேண்டுகோளுக்கிணங்க இப்பதவிக்கு போட்டியிட சம்மதித்தேன். மக்கள் என்னை வெற்றிபெறச் செய்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது’ என்றார்.