கார்த்திகை பிரதோஷம், பவுர்ணமியை முன்னிட்டு சதுரகிரிக்கு செல்ல 4 நாள் அனுமதி

வத்திராயிருப்பு : மதுரை மாவட்டம், சாப்டூர் அருகே, மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் உள்ளது. இங்கு அமாவாசை, பவுர்ணமிக்கு தலா 3 நாட்கள், பிரதோஷத்திற்கு ஒரு நாள் என பக்தர்கள் தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். கார்த்திகை மாத பிரதோஷம், பவுர்ணமியை முன்னிட்டு, நாளை (டிச.9) முதல் 12ம் தேதி வரை 4 நாட்கள் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளனர். நாளை பிரதோஷத்தை முன்னிட்டும், 11ம் தேதி இரவு பவுர்ணமியை முன்னிட்டும், சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கு பால், பழம், இளநீர் உள்ளிட்ட பல்வேறு வகையான அபிஷேகங்கள் நடைபெற உள்ளன. இந்த நாட்களில் பக்தர்கள் அதிகமாக வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை செயல் அலுவலர் விஸ்வநாத் செய்து வருகிறார்.

Related Stories: