கிரிக்கெட் கதையில் அசோக் செல்வன், கீர்த்தி

சென்னை: லெமன் லீப் கிரியேஷன்ஸ், நீலம் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது. இதில் அசோக் செல்வன், சாந்தனு பாக்யராஜ், பிருத்வி பாண்டியராஜன், கீர்த்தி பாண்டியன், திவ்யா துரைசாமி நடித்துள்ளனர். இயக்குனர் பா.ரஞ்சித் உதவியாளர் ஜெய்குமார் இயக்கியுள்ளார். தமிழழகன் ஒளிப்பதிவு செய்ய, கோவிந்த் வசந்தா இசை அமைத்துள்ளார்.

கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி உருவாகியுள்ள இப்படத்தின் ஷூட்டிங் அரக்கோணத்தில் நடந்துள்ளது. கிரிக்கெட் விளையாடும் இளைஞர்கள், அவர்களின் நட்பு, காதல் போன்ற ஜனரஞ்சகமான விஷயங்களுடன் இப்படம் உருவாகியுள்ளது. கணேசமூர்த்தி, சவுந்தர்யா கணேசமூர்த்தி, பா.ரஞ்சித் இணைந்து தயாரித்துள்ளனர். தமிழ் பிரபா, ஜெய்குமார் இணைந்து திரைக்கதை, வசனம் எழுதியுள்ளனர்.

Related Stories: