சென்னை: லெமன் லீப் கிரியேஷன்ஸ், நீலம் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது. இதில் அசோக் செல்வன், சாந்தனு பாக்யராஜ், பிருத்வி பாண்டியராஜன், கீர்த்தி பாண்டியன், திவ்யா துரைசாமி நடித்துள்ளனர். இயக்குனர் பா.ரஞ்சித் உதவியாளர் ஜெய்குமார் இயக்கியுள்ளார். தமிழழகன் ஒளிப்பதிவு செய்ய, கோவிந்த் வசந்தா இசை அமைத்துள்ளார்.