ஐதராபாத்: வெங்கட் பிரபு, நாக சைதன்யா இணைந்துள்ள படத்தின் பர்ஸ்ட் லுக் நேற்று வெளியிடப்பட்டது. மாநாடு படத்துக்கு பிறகு தெலுங்கு, தமிழில் உருவாகும் படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார். இதில் நாக சைதன்யா, கிரித்தி ஷெட்டி, அரவிந்த் சாமி உள்பட பலர் நடிக்கிறார்கள். இளையராஜா, யுவன் ஷங்கர் ராஜா இணைந்து இசையமைக்கிறார்கள். பின்னணி இசையை யுவன் ஷங்கர் ராஜா அமைக்கிறார். ஸ்ரீனிவாச சித்தூரி தயாரித்துள்ளார். இந்த படத்துக்கு பெயரிடாமல் படப்பிடிப்பு நடந்தி வந்தனர்.