சதீசுக்கு பாட்டு எழுதிய சிவகார்த்திகேயன்

சிம்பு நடித்த வேட்டை மன்னன் படத்தில், இயக்குனர் நெல்சன் திலீப்குமாரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர், சிவகார்த்திகேயன். அப்படம் திடீரென்று நிறுத்தப்பட்ட பிறகு டி.வியில் நுழைந்து பிரபலமானார். மிமிக்ரி செய்வதிலும் தேர்ச்சி பெற்ற அவர், தற்போது சக்சஸ்ஃபுல் ஹீரோவாக வலம் வருகிறார். தயாரிப்பாளராக மாறி கனா, நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா, வாழி, டாக்டர், டான் ஆகிய படங்களை தயாரித்தார். பின்னணி பாடகராக மாறி வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான் கராத்தே, காக்கி சட்டை, மாப்ள சிங்கம், ரஜினிமுருகன், கனா, மிஸ்டர் லோக்கல், தும்பா, சிக்சர், லிப்ட் ஆகிய படங்களில் பாடினார்.

இந்நிலையில், படங்களில் பாட்டு எழுதவும் அதிக ஆர்வம் காட்டுகிறார். கோலமாவு கோகிலா, கூர்கா, நம்ம வீட்டுப் பிள்ளை, ஆதித்ய வர்மா, டாக்டர் ஆகிய படங்களில் எழுதியுள்ள அவர், தற்போது சதீஷ் கதையின் நாயகனாக நடிக்கும் நாய் சேகர் படத்துக்கும் எழுதியுள்ளார். இதில் பவித்ரா லட்சுமி ஹீரோயினாக நடிக்கிறார். அஜீஷ் அசோக் இசை அமைக்கிறார். ஒரு பாடலுக்கு அனிருத் இசை அமைக்கிறார். அப்பாடலை சிவகார்த்திகேயன் எழுதியுள்ளார்.

Related Stories: