நம்பியவருக்கு காவலன்..எதிர்ப்பவர்களுக்கு எமன்!: செய்வினை பில்லி சூனியத்தை அண்ட விடாமல் செய்யும் கருப்பசாமி..!!

தன்னை வேண்டி வரும் பக்தர்களை காக்கும் கடவுளாக கருப்பசாமி இருக்கிறார். கருப்பசாமி ஒரு கிராம காவல் தெய்வம். கருப்பசாமி, கருப்பன் என அழைக்கிறார்கள். காத்து, கருப்பு நம்மை அண்டவிடாமல் எப்பொழுதும் கூடவே இருந்து காத்து வழிநடத்துபவர் கருப்பசாமி. சுருட்டு மற்றும் சாராயம் கருப்பசாமிக்கு பிடித்த படையல் வகைகள்.

கருப்பசாமி கோயிலுக்கு சென்று வழிபடுகின்ற பெண் பக்தர்கள் கூட சுருட்டு மற்றும் சாராயம் வாங்கி சென்று வேண்டுதல் செய்து கருப்பசாமியை வழிபட்டு வருகிறார்கள். எப்பொழுதும் மிகவும் பரிசுத்தமாக இருப்பவர்களை மட்டுமே கருப்பசாமி பூஜைக்கு அனுமதிக்க வேண்டும். பொய் சொல்பவர்களை கருப்பு சாமிக்கு பிடிக்கவே செய்யாது.

அப்படிப்பட்டவர்களுக்கு ஏற்ற தண்டனையும் கிடைக்கும். அதுபோல மோசமான பழக்க வழக்கம் உடையவர்கள் கருப்பசாமிக்கு பூஜை செய்யும் பொழுது அதன் பலனை அவர்கள் அடைவார்கள். கருப்பசாமிக்கு பூஜையில் அமர்ந்தவுடன் திருவிளக்கேற்றி, சங்கல்பம், நாள், நட்சத்திரம், திதி, கோத்திரம் ஆகியவற்றைச் சொல்லி வணங்க வேண்டும்.

அதுபோல நீங்கள் எந்த காரியத்திற்காக பூஜை செய்யப் போகிறீர்களோ அந்த காரியத்தை முழுவதுமாக உங்களுடைய மனதில் நினைத்துக் கொண்டே பூஜையை தொடங்க வேண்டும். கருப்பசாமி எந்த நேரத்திலும் நியாயம் தர்மத்திற்கு துணை நிற்கக் கூடியவர். தன்னை வேண்டி வந்து வழிபாடு செய்யக்கூடிய பக்தர்களுக்கு எந்த குறையும் வரை விட மாட்டார்.

கருப்புசாமி எல்லைக்கு உள்ள தீய சக்திகள், செய்வினைகள், பில்லி சூனியங்கள், சாபங்கள், தீமைகள் இப்படி எதுவும் அண்டாது. உடல் ஆரோக்கிய பிரச்சனை இருப்பவர்களுக்கு அவர்களுடைய உடலில் ஏற்படக்கூடிய பிரச்சனைகளை நீக்கி சந்தோஷமாக வாழ வழி செய்பவர். எல்லாவிதமான செல்வத்தையும் வாரி வழங்கி தன்னுடைய பக்தர்களை எப்பொழுதும் சந்தோஷமாக வைத்திருக்க விரும்புபவர் கருப்பசாமி.

கருப்பசாமி ஆஞ்சநேயருக்கு நிகரானவர் என கூறுகிறார்கள். ஆஞ்சநேயரைப் போல கருப்பசாமி ராமர் மீது அதிக பக்தி கொண்டு அவரையே வழிபட்டு வந்தவர். பகவான் ராமரால் படைக்கப்பட்டவர் கருப்பசாமி என்பதால் அவரை ஆஞ்சநேயருக்கு நிகரானவர் எனவும் கூறுகிறார்கள். ஆகையால் கருப்பசாமியை நீங்கள் வேண்டி பூஜை செய்து வழிபட்டு வரும் பொழுது மிக முக்கியமாக மிகவும் சுத்தமான மனதோடு எந்தவித பொய் சொல்லாமல் உண்மையாக வழிபட்டு வரும்பொழுது எல்லாவித நன்மைகளையும் தந்து உங்களை நீண்ட ஆயுளோடு வாழ வைப்பார்.

Related Stories: