காதலன் ஏமாற்றியதால் மன உளைச்சலுக்கு ஆளான அனன்யா

ஐதராபாத்: தெலுங்கு படவுலகில் அதிக கவனம் செலுத்தி நடித்து வருபவர், அனன்யா நாகல்லா. பவன் கல்யாண் நடிப்பில் வெளியான ‘வக்கீல் சாப்’ என்ற படத்தில், திவ்யா நாயக் என்ற கேரக்டரில் நடித்து அனைவரையும் கவர்ந்தார். அவர் அளித்துள்ள ஒரு பேட்டி: திரையுலகில் நான் அறிமுகமான காலக்கட்டத்தில், திடீரென்று ஒருவரின் காதல் வலையில் சிக்கினேன். ஆனால், அந்த காதலில் எதிர்பாராமல் மனமுறிவு ஏற்பட்டது. இதனால் நான் கடும் மனவேதனை அடைந்தேன். மன அழுத்தம் காரணமாக என் மனம், மூளை என்று எதுவும் தொடர்பில்லாமல் போய்விட்டது.

சில நேரங்களில் என் சோகத்தை தாங்கிக்கொள்ள முடியாமல், நான் மிகவும் விரும்பி காதலித்த அவரை தொடர்புகொள்வேன். இவ்வளவு நடந்த பிறகும் ஏன் அவரை தொடர்புகொண்டு பேச நினைக்கிறேன் என்று எனக்கு புரியவில்லை. இரவு முழுவதும் தூங்காமல் அழுதுகொண்டே இருப்பேன். எனினும், காலையில் எழுந்ததும் வழக்கம்போல் உடற்பயிற்சி செய்வேன். படப்பிடிப்பில் கேரவனில் இருக்கும்போது அழுதுகொண்டே இருப்பேன். யாராவது வந்தால், உடனே கண்களை துடைத்துக்கொண்டு வெளியே வந்து, எதுவுமே நடக்காத மாதிரி கேமரா முன்னால் நின்று இயல்பாக நடிப்பேன் என்றார்.

 

Related Stories: