ராகு-கேது பெயர்ச்சி : 21:3:2022
புதுக்கோட்டைக்கு அருகே, திருமயத்திலிருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ளது பேரையூர். மூலவர், நாகநாதர். அம்மன், பிரகதாம்பாள்.
சென்னையிலிருந்து 110 கி.மீ., திருப்பதியிலிருந்து 40 கி.மீ. தொலைவில் உள்ளது காளஹஸ்தி. இது புகழ்பெற்ற ராகு-கேது தலமாகும். இறைவன், காளத்திநாதர் (ராகு பாவனை); அம்மை ஞானப்பூங்கோதை (கேது பாவனை). கும்பகோணத்திலிருந்து 9 கி.மீ. தொலைவில் உள்ளது, திருநாகேஸ்வரம். நாகேஸ்வரரையும், பிறையணிவாணுதலாள் அம்மனையும், இரண்டாம் பிராகாரத்திலுள்ள நாகராஜரையும் வணங்குவது சிறப்பு.ஈரோடுக்கு அருகேயுள்ள கொடுமுடியிலிருந்து 7 கி.மீ. தொலைவிலுள்ளது ஊஞ்சலூர். இத்தலத்தில் நாகேஸ்வரர் மூலவர்.காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயிலுக்கு அருகேயுள்ள தலத்தில், மாகாளன் எனும் நாகம் காளத்திநாதர் ஆணைப்படி இங்கு லிங்கம் அமைத்து பூஜித்தது. மூலவர் மகாகாளேஸ்வரர். இது, ராகு-கேது பூஜித்த தலமும் ஆகும்.கும்பகோணம் நகரின் மையத்திலேயே அமைந்துள்ள நாகேஸ்வரன் கோயிலில், நாகேஸ்வரரும், பெரியநாயகியும் அருள்பாலிக்கிறார்கள். ஆதிசேஷன் வழிபட்ட தலம் இது.நாகப்பட்டினம் கோயிலில் இறைவன் காயாரோகணேஸ்வரரை ஆதிசேஷன் பூஜித்து மகிழ்ந்தார். அம்பாளுக்கு நீலாயதாட்சி என்று பெயர். சென்னை போரூர்-குன்றத்தூர் பாதையில் கெருகம்பாக்கத்தில் வாசுகி பாம்பு உமிழ்ந்த விஷத்தை உண்ட நீலகண்டேஸ்வரர், ஆதிகாமாட்சி எனும் திருப்பெயர்களோடு இறைவனும், இறைவியும் அருள்கின்றனர்.திருவாரூர்-நாகை பாதையிலுள்ள கீழ்வேளூரிலிருந்து 3 கி.மீ, தொலைவில் உள்ளது திருக்கண்ணங்குடி. சுயம்பு லிங்கமாக காளத்தீஸ்வரர் இங்கு வீற்றிருக்கிறார்.கும்பகோணம் அல்லது மயிலாடுதுறையிருந்து நன்னிலம் வழியாக ஸ்ரீவாஞ்சியத்தை. ராகுவும், கேதுவும் சேர்ந்து ஒரே விக்ரகமாக அமைந்திருக்கும் அரிய கோலத்தை இங்கு தரிசிக்கலாம். மன்னார்குடிக்கு வடக்கே 3 கி.மீ. தொலைவிலுள்ள பாமணி தலத்தில் சுயம்பு லிங்கமாக அருள்கிறார் நாகநாதர். இறைவி, அமிர்தநாயகி. பாதாளத்திலிருந்து ஆதிசேஷன் தோன்றி வழிபட்டதால் பாதாளீச்சரம் என்றும் இக்கோயிலுக்குப் பெயர்.சிவகங்கை மாவட்டம், இளையான்குடியிலிருந்து 5 கி.மீ. தொலைவில் நாகமுகுந்தன்குடியை அடையலாம். இங்கு நாகேஸ்வரர் மூலவராக அருள் புரிகிறார்.திருநெல்வேலியிலிருந்து 13 கி.மீ. தொலைவில் உள்ளது கோடகநல்லூர். இங்கு காளத்தீஸ்வரர் எனும் திருநாமத்தோடு இறைவன் அருள்பாலிக்கிறார். திருவள்ளூர், சோளிங்கரிலிருந்து 12 கி.மீ. தொலைவில் உள்ள பெத்தநாகபுடியில் நாகவல்லி சமேத நாகநாதேஸ்வரரை தரிசிக்கலாம்.வேலூர், வாணியம்பாடிக்கு அருகில் உள்ளது, ஆம்பூர். அபயவல்லி, நாகரத்தின சுவாமியாக இறைவனும், இறைவியும் அருளாசி வழங்குகிறார்கள்.நாகப்பட்டினத்திற்கு அருகே உள்ளது நாகூர். இங்கு நாகவல்லி சமேத நாகநாதராக இறைவன் அருள்பாலிக்கிறார். நாகராஜன் பூஜித்து பேறுபெற்ற தலம் இது.மயிலாடுதுறை, தரங்கம்பாடிக்கு அருகேயுள்ள திருக்களாஞ்சேரியில் மூலவர் சுயம்புலிங்கமாக நாகநாதர் திகழ்கிறார். கும்பகோணம் அல்லது மயிலாடுதுறையிலிருந்து பேரளம் வழியாக திருப்பாம்புரம் தலத்தை அடையலாம். பாம்புரேஸ்வரரும், வண்டார் பூங்குழலி இங்கு உறையும் தெய்வங்கள். இதுவும் ஆதிசேஷன் வழிபட்ட தலம்தான்.ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியிலிருந்து 12 கி.மீ. தொலைவில் நயினார்கோவில் அமைந்துள்ளது. சௌந்தரநாயகி சமேத நாகநாதராக இங்கு இறைவன் அருள்பாலிக்கிறார்.