மேலும், ஸ்ரீக்கு ஒருவித மனநோய் ஏற்பட்டு இருப்பதாகவும் அவரை உடனடியாக மீட்டு சிகிச்சை அளித்தால் மட்டுமே அவரை காப்பாற்ற முடியும் என்றும் கூறியுள்ளார். schizophrenia என்கிற மன நோயால் ஸ்ரீ பாதிக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அவரது காதில் யாரோ பேசிக் கொண்டிருப்பது போல தோன்றும் என்றும் சினிமாவில் அவருக்கு வாய்ப்பு கிடைக்காமல் பல ஆண்டுகளாக தனிமையில் குடும்பத்தினரை பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், விரக்தியின் காரணமாக அவருக்கு இப்படி ஆகியிருக்கலாம் என்கின்றனர். ஸ்ரீயை தொடர்பு கொள்ள முடியவில்லை என்றாலும் அவர் இருக்கும் இடத்தை அறிந்துக் கொண்டோம். விரைவில் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்ப்போம் என்றும் ஸ்ரீயின் நண்பர் கூறியுள்ளார்.
காதில் குரல்கள் கேட்கும் மனநோயால் ஸ்ரீ பாதிப்பு: நண்பர் திடுக் தகவல்
