தஞ்சை பெருவுடையார் திருக்கோயில் திருச்சுற்றின் வடமேற்கு மூலையில் அமைந்துள்ள சுப்ரமணியர் திருக்கோயிலின் வடப்புறச்சுவர் சன்னலின் கீழ் அமைந்துள்ள நுண்ணிய பேரழகு குறுஞ்சிற்பம்.!கைகளில் ஆயுதம் தாங்கிய எண்கரத்தோளாய் போர் புரியும் நுணுக்கமான குறுஞ்சிற்பம்.முன்னிரு கைகள் கத்தியும் சதுர வடிவ கேடயமும் தாங்கியிருக்க பின்கைகள் சங்கு சக்கரம் கதை பாசக்கயிறு என ஏந்தியிருக்கின்றன. பின்வலக்கை அபயம் காட்ட பின் இடக்கை வரத முத்திரை காட்டுகிறது.