மனைவி ஆர்த்தியை பிரிந்த நிலையில் மும்பையில் செட்டில் ஆகிவிட்டாரா ஜெயம் ரவி?

மும்பை: மனைவி ஆர்த்தியை பிரிந்த நிலையில் மும்பைக்கு புறப்பட்டு சென்றார் ஜெயம் ரவி. ஆர்த்தி இங்கு இருப்பதால் அவர் அங்கு செட்டில் ஆவதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது. நேற்று மும்பையில் இருக்கும் ஸ்டுடியோ ஒன்றுக்கு ஜெயம் ரவி சென்றபோது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியானது. ஜெயம் ரவியை தேடி பாலிவுட் பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறதாம்.
இனிமேல் அவர் பாலிவுட் படங்களில் மட்டும் தான் நடிப்பார். ஏற்கனவே இரண்டு இந்தி படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுவிட்டார் என பேச்சு கிளம்பியுள்ளது. இந்நிலையில் இது குறித்து ஜெயம் ரவி பேட்டி ஒன்றில் கூறியிருப்பதாவது:

பாலிவுட் படங்க ளில் நடிப்பது தொடர்பாக சில அழைப்புகள் வந்தது. சந்திப்புகள் நடந்தது. முன்பும் கூட பாலிவுட் பட வாய்ப்பு வந்தது. டபுள் ஹீரோ சப்ஜெக்ட் படங்கள் வந்தது. என் கதாபாத்திரம் பிடிக்காததால் நடிக்கவில்லை. தமிழில் நல்லா இருக்குனு விட்டுட்டேன். அங்கே போய் செகண்ட் ஹீரோவாக நடிக்கணுமா என நினைத்தேன். இப்பொழுதுமே நான் தமிழ் படங்களை விட்டு போகவில்லை. தமிழுக்குதான் முதல் முக்கியத்துவம். அதே சமயம், சில இந்தி படங்களிலும் நடிக்க முடிவு செய்திருக்கிறேன். அதற்கான முயற்சிகள் போய்க் கொண்டிருக்கிறது. முன்பு வந்த வாய்ப்பை ஏற்க மறுத்துவிட்டேன். தற்போது அந்த வாய்ப்புகளை பயன்படுத்த விரும்புகிறேன். அங்கே வேலை செய்ய வேண்டும் என்றால் மும்பையில் கொஞ்ச காலம் இருந்து தான் ஆக வேண்டும் என்றார்.

The post மனைவி ஆர்த்தியை பிரிந்த நிலையில் மும்பையில் செட்டில் ஆகிவிட்டாரா ஜெயம் ரவி? appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: