தேவையான பொருட்கள் :
கடலைப்பருப்பு - 2 கப்,பச்சை மிளகாய் - 2,
முளைக்கீரை, பசலைக் கீரை - தலா ஒரு கப்,வெங்காயம் - 2பெருஞ்சீரகம் - 1 ஸ்பூன்உப்பு - தேவைக்கேற்ப,எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு.
செய்முறை:*கீரை, வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கிகொள்ளவும்.* கடலைப்பருப்பை 1 மணி நேரம் ஊறவைத்து உப்பு, பச்சை மிளகாய் சேர்த்து கெட்டியாக அரைக்கவும்.*அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் கீரை, வெங்காயம், பெருஞ்சீரகம் சேர்த்துப் பிசைந்து கொள்ளவும். மாவில் தண்ணீர் சேர்க்கக்கூடாது.* கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் மாவை வடைகளாகத் தட்டி, காயும் எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.* சுவையான கீரை வடை ரெடி. திரௌபதி அக்ஷய பாத்திரத்தில் ஒட்டியிருந்த கீரையை கண்ணணுக்கு தந்ததால் அதில் அக்ஷயமாக அன்னம் வந்தது.