சூப்பர் ஸ்டார் ரஜினி காந்தும், இசைஞானி இளையராஜாவும் மிகுந்த நட்போடு பழகுகிறவர்கள். இளையராஜாவை ரஜினி எப்போதும் சாமி என்றே அழைப்பார். இருவரும் தனிப்பட்ட குடும்ப விஷயங்களை கூட பகிர்ந்து கொள்வார்கள். இளையராஜா தற்போது கோடம்பாக்த்தில் சொந்தமாக ஸ்டூடியோ அமைத்துள்ளார். மன அமைதி தேவைப்படும்போதெல்லாம் இந்த ஸ்டூடியோவுக்கு செல்வதை ரஜினி வழக்கமாக வைத்துள்ளார். அங்கு நெடுநேரம் செலவு செய்து அமர்ந்து இளையராஜாவின் பாடல்களை கேட்பார். அவர் பணியாற்றுவதை பார்த்து ரசிப்பார். விரைவில் இளையராஜா கோவையில் பிரமாண்ட கச்சேரி ஒன்றை நடத்துகிறார். இதற்கான ரிகல்சல் நடப்பதை கேள்விட்டு இளையராஜாவின் ஸ்டூடியோவிற்கு சென்று அதை பார்த்து ரசித்துள்ளார் ரஜினி.