பெங்களூரு: நடிகை பிரணிதா சுபாஷ் தனது கணவருக்கு பாதபூஜை செய்த விவகாரம் தற்போது சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது. கன்னட நடிகை பிரணிதா சுபாஷ், தமிழில் ‘உதயன்’, ‘சகுனி’, ‘மாஸ்’, ‘எனக்கு வாய்த்த அடிமைகள்’, ‘ஜெமினி கணேசனும் சுருளிராஜனும்’ ஆகிய படங்களில் நடித்தார். இந்தி, தெலுங்கு படங்களிலும் நடித் துள்ளார். கடந்த ஆண்டு மே மாதம் தொழிலதிபர் நிதின் ராஜூ என்பவரை காதல் திருமணம் செய்து கொண்ட அவருக்கு சமீபத்தில் பெண் குழந்தை பிறந்தது. அதற்கு ஆர்னா என்று ெபயரிட்டுள்ளார். தற்போது ‘ரமண அவதாரா’ என்ற கன்னடப் படத்தில் பிரணிதா சுபாஷ் நடித்து வருகிறார். இந்நிலையில், ஆடி அமாவாசை அன்று பிரணிதா சுபாஷ் தனது கணவர் நிதின் ராஜூவுக்கு பாதபூஜை செய்தபோது எடுத்த போட்டோக்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார்.