சென்னை: இந்தியா 75வது சுதந்திர தினத்தை வெகுவிமரிசையாக கொண்டாடி வருகிறது. இந்த நிலையில், சுதந்திரத்தின் பவளவிழா ஆண்டை அனைவரும் கொண்டாட வேண்டும் என்ற வகையில், பிரதமர் மோடி நாட்டு மக்க ளுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார். அதன்படி, ஆகஸ்ட் 13 முதல் 15ம் தேதி வரை தங்களுடைய வீடுகளில் தேசியக்கொடி ஏற்ற வேண்டும். சமூக வலைத்தளத்தில் உள்ளவர்கள் தங்கள் டிபியில் தேசியக்கொடியை வைக்க வேண்டும் என்று அவர் கூறியிருந்தார்.