ஆற்காடு: ஆற்காடு அடுத்த கலவையில் உள்ள ஸ்ரீ தர்மசம்வர்த்தினி சமேத ஸ்ரீகாரீசநாதர் கோயிலில் பங்குனி உத்திர பிரமோற்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஆற்காடு அடுத்த கலவையில் பிரசித்தி பெற்ற ஸ்ரீகாரீசநாதர் கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர பிரமோற்சவ விழா வெகுசிறப்பாக நடைபெற்று வருகிறது. அதேபோல் இந்த ஆண்டு பிரமோற்சவம் நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.