சுரண்டை அருகே வேலப்பநாடாரூர் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

சுரண்டை: சுரண்டை அருகே உள்ள வேலப்ப நாடாரூரில் பழமையான மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் கோபுரம் மற்றும் முன் மண்டபம் அமைத்து ரூ.80 லட்சம் செலவில் வேலப்பநாடாரூர் பொது மக்கள் சார்பில் திருப்பணி வேலைகள் நடந்தன. கடையநல்லூர் வால்மீகி நாதர் அய்யர் தலைமையில் கும்பாபிஷேக பூஜைகள் நடைபெற்று வந்தன. கடந்த 16ம் தேதி முக்கிய கோயில்களில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித தீர்த்தம் முருகன் சன்னதியில் இருந்து மங்கள இசை முழங்க அழைத்து வரப்பட்டு யாகசாலை பூஜை தொடங்கியது. 17ம் தேதி (ஞாயிறு) இரண்டாம் மற்றும் மூன்றாம் கால யாக பூஜை, யந்திர பூஜை, பிரதிஷ்டை அஷ்டபந்தனம் சாற்றுதல், தீபாராதனை மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது. நேற்று (18ம் தேதி) காலை 6.30 மணிக்கு மாரியம்மன், காளியம்மன், மஹா கணபதி, கருப்பன், கால பைரவருக்கு மஹாகும்பாபிஷேகம் நடந்தது. அப்போது ஓம் சக்தி கோஷம் விண்ணை பிளந்தது.

தொடர்ந்து மதியம் 12 மணிக்கு பத்தாயிரம் பேர் கலந்து கொண்ட மாபெரும் அன்னதானம் நடைபெற்றது. பெண் பக்தர்கள் முளைப்பாரி, மாவிளக்கு எடுத்து அம்மனை வழிபட்டனர். விழா ஏற்பாடுகளை வேலப்பநாடாரூர் இந்து நாடார் உறவின்முறை கமிட்டிசெயலாளர் மாணிக்கம், உறுப்பினர்கள் ராஜன், தங்கசாமி, துரைப்பாண்டி,மாரிக்கனி, மாடசாமி, ரவிராஜன், மகேஷ் குமார், மாரியம்மன், ஐயப்பன்,சுப்பிரமணியன், சிவஜெயராஜ் மற்றும் தொழிலதிபர்கள் பால்ராஜ், சமுத்திரம், மாணிக்கசாமி, சேர்ந்தமரம் கூட்டுறவு சங்க தலைவர் வைத்திலிங்கம், கிருஷ்ணசாமி, இசக்கிராஜன்,சிவலிங்கசாமி, வெண்ணிலா ஆறுமுகம்,வெண்ணிலா ஆனந்த்,ராஜன்,முருக ராஜன்,ஹரிஹரன்,கோபிராஜ்,சதீஸ்குமார்,ராமர்,கந்தசாமி, செல்லத்துரை,தங்கதுரை,சேர்மக்கனி,மாரியப்பன்,செல்வம்,லிங்கசாமி, மாணிக்கசாமி, சுரேஷ்கண்ணன், முத்துக்குமார், மாணிக்கவேல் மற்றும் சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Related Stories: