அந்தியூர்: அந்தியூர் அருகே உள்ள அத்தாணி வனப்பகுதியில் பொன்னாச்சி அம்மன் கோவில் குண்டம் திருவிழா நேற்று நடந்தது. ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள அத்தாணி வனப்பகுதியில் பொன்னாச்சி அம்மன் கோவில் உள்ளது. இக்கோயில் குண்டம் திருவிழா கடந்த 16ம் தேதி பூச்சாட்டுதலுடன் துவங்கியது. இதில் நேற்று மதியம் குண்டம் திருவிழா நடந்தது. படைக்கலத்துடன் அம்மை அழைத்தல் நிகழ்ச்சியாக குதிரையிடம் வாக்கு கேட்கப்பட்டது. இதையடுத்து பொன்னாச்சி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. பின்னர் விரதம் இருந்த பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.