அறம் செய் அரசியல் படமா?.. இயக்குனர் விளக்கம்

சென்னை: தாரகை சினிமாஸ் சார்பில் பாலு எஸ்.வைத்தியநாதன் தயாரித்து இயக்கி ஹீரோவாக நடித்துள்ள படம், ‘அறம் செய்’. ஜீவா தங்கவேல், மேகாலி மீனாட்சி, அஞ்சனா கீர்த்தி, ஜாகுவார் தங்கம், திருச்சி சாதனா நடித்துள்ளனர். இப்படம் சம்பந்தமான நிகழ்ச்சியில் மேகாலி மீனாட்சி பேசும்போது, ‘இதில் எனக்கு வித்தியாசமான கேரக்டர் கிடைத்துள்ளது. பாலு வைத்தியநாதன் படப்பிடிப்பில் பரபரப்பாகப் பணியாற்றுவார். காட்சிகளைப் பொறுமையாகவும், நன்றாகவும் சொல்லிக் கொடுப்பார்’ என்றார். அஞ்சனா கீர்த்தி பேசுகையில், ‘புரட்சிகரமாகப் பேசும் அழுத்தமான கேரக்டரில் நடித்துள்ளேன்.

ரசிகர்களிடம் எனக்கு பாராட்டும் கிடைக்கும், திட்டுகளும் கிடைக்கும்’ என்றார். பாலு எஸ்.வைத்தியநாதன் பேசுகையில், ‘இது அரசியல் படம் என்றாலும், நாங்கள் அரசியல் பேசவில்லை. ஜீவா தங்கவேல் நீட் தேர்வு பற்றி பேசியிருக்கிறார்’ என்றார்.

The post அறம் செய் அரசியல் படமா?.. இயக்குனர் விளக்கம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: