சுசீந்திரம் கோயிலில் இன்று கருட தரிசனம்

சுசீந்திரம்: சுசீந்திரம் தாணுமாலயசுவாமி கோயிலில் மார்கழி பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. 3வது திருவிழாவான நேற்று முன்தினம் இரவு மக்கள்மார் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. 4ம் திருவிழாவான நேற்று காலை 8 மணிக்கு சுவாமி வீதிஉலா வரும் நிகழ்ச்சி, இரவு 10.30 மணிக்கு பரங்கி நாற்காலி வாகனத்தில் சுவாமி வீதிஉலா வரும் நிகழ்ச்சி நடந்தது.

5ம் விழாவான இன்று அதிகாலை 5 மணிக்கு பஞ்சமூர்த்தி தரிசனம், 6 மணிக்கு வீரமார்த்தாண்டம் விநாயகர் கோயில் முன் சுவாமி, அம்பாள், பெருமாள் ஆகியோரை அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் வைத்து விநாயகர் கோயில் முன் கிழக்கு நோக்கி நிற்கும்போது சுவாமிகளை கருடன் வலம் வரும் கருட தரிசன நிகழ்ச்சி நடக்கிறது. மாலை 5 மணிக்கு யானை ஸ்ரீபலி, 5.30 மணிக்கு ஊஞ்சல் மண்டபத்தில் சுவாமிக்கு அஷ்டாபிஷேகம், இரவு 10 மணிக்கு ரிஷப வாகனத்தில் சுவாமி திருவீதியுலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது.

Related Stories: