‘ராமம் ராகவம்’ படத்துக்கு டப்பிங் பேசும்போது நெஞ்சை அடைத்தது: சமுத்திரக்கனி உருக்கம்

சென்னை: தெலுங்கு காமெடி நடிகர் தன்ராஜ் இயக்குனராக அறிமுகமாகும் ‘ராமம் ராகவம்’ படம் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகியுள்ளது. தந்தையாக சமுத்திரக்கனி, மகனாக தன்ராஜ் நடித்துள்ளனர். ஹீரோயினாக கொல்கத்தா மோக்‌ஷா நடித்துள்ளார். பிருத்தவி போலவரபு தயாரித்துள்ளார். இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் சூரி, தம்பி ராமய்யா, பாபி சிம்ஹா, தீபக், ஹரீஷ் குமார், ‘பிச்சைக்காரன்’ பட புகழ் மூர்த்தி, பாண்டிராஜ், என்.கே.ஏகாம்பரம் பங்கேற்றனர். சிறப்பு விருந்தினர் இயக்குனர் பாலா பேசுகையில், ‘சிறந்த நடிகனாக தன்னை நிரூபித்துள்ள சமுத்திரக்கனியின் அயராத உழைப்புக்கு நான் ரசிகன். மற்றவர்களுக்கு உதவும் நல்ல மனம் கொண்டவர். இந்த குணத்தை அவர் மாற்றிக்கொள்ள வேண்டாம்’ என்றார்.

சமுத்திரக்கனி பேசும்போது, ‘ஒவ்வொரு தந்தையும் ஒரு சகாப்தம். இதுவரை பத்துக்கும் மேற்பட்ட அப்பா கதைகளில் நடித்துவிட்டேன். ஒவ்வொன்றும் தனி அனுபவம். ‘டான்’ படத்தில் சிவகார்த்திகேயனின் தந்தையாக நடித்தேன். டப்பிங் பேசும்போது எனக்கு நெஞ்சை அடைத்தது. சில நாட்கள் பேசவில்லை. ‘ராமம் ராகவம்’ படத்துக்கு டப்பிங் பேசும்போதும் நெஞ்சை அடைத்தது. தன்ராஜூக்கு தந்தையும், தாயும் இல்லை. தானே உழைத்து முன்னேறி இருக்கிறார். ஒரு தந்தைக்கும், மகனுக்கும் இடையிலுள்ள சிக்கல்கள் குறித்து படம் பேசுகிறது’ என்றார்.

The post ‘ராமம் ராகவம்’ படத்துக்கு டப்பிங் பேசும்போது நெஞ்சை அடைத்தது: சமுத்திரக்கனி உருக்கம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: