கர்மா தன் வேலையை காட்டும்: ஸ்ருதிஹாசன் திடீர் தத்துவம்

சென்னை: கர்மா தனது வேலையை காட்டியே தீரும் என்றார் ஸ்ருதிஹாசன். கமல்ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன், பிரபாஸ் ஜோடியாக சலார் படத்தில் நடித்துள்ளார். இப்படம் அடுத்த மாதம் பல மொழிகளில் திரைக்கு வர உள்ளது. பெற்றோரை விட்டு, காதலர் சாந்தனுவுடன் மும்பையில் வசித்து வருகிறார் ஸ்ருதி ஹாசன். தனது காதலருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை சமீபத்தில் வெளியிட்டு இருந்தார். இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட பதிவில், ‘தனக்கான குழிகளை தாமே தோண்டிக்கொள்கிறார்கள்.

இத்தகைய நபர்களை பார்த்து வருகிறேன். நமது வேலையில் மட்டும் கவனம் செலுத்தி, அதன் பாதையில் சென்றுகொண்டே இருக்க வேண்டும். யார் தடை போட்டாலும் பயந்து நின்றுவிடக் கூடாது. கர்மாவை பொறுத்தவரை அது தனது வேலையை காட்டியே தீரும். அதிலிருந்து யாரும் தப்பி போக முடியாது’ என ஸ்ருதி கூறியுள்ளார். ஆனால் ஸ்ருதி ஹாசன் யாரைப் பற்றி சொல்கிறார் என புரியாமல் நெட்டிசன்கள் குழப்பம் அடைந்துள்ளனர். ஸ்ருதி யாரை சொல்கிறார் என அவர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

The post கர்மா தன் வேலையை காட்டும்: ஸ்ருதிஹாசன் திடீர் தத்துவம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: