31 ஆண்டுகளுக்கு பிறகு இணைந்த இளையராஜா, பாரதிராஜா

சென்னை: இளையராஜாவுடன் 31 ஆண்டுகள் கழித்து இணைந்துள்ளார் இயக்குனர் பாரதிராஜா. தற்போது பல படங்களில் குணசித்திர வேடங்களில் பாரதிராஜா நடித்து வருகிறார். அந்த வகையில் அவர் நடித்து வரும் படம் ‘மார்கழி திங்கள்’. இந்த படத்தை அவரது மகன் மனோஜ் இயக்கி வருகிறார். படத்தில் ஷியாம் செல்வன் மற்றும் ரக்‌ஷனா ஹீரோ, ஹீரோயின்களாக நடித்து வருகின்றனர். இதுதவிர முழுக்க முழுக்க புதுமுகங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். கிராமத்து கதைக்களத்தில் அழகான காதல் கதையாக உருவாகும் இந்த படத்தை பிரபல இயக்குனர் சுசீந்திரன், தனது வெண்ணிலா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்கிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு தேனி மற்றும் மதுரை ஆகிய பகுதிகளில் உள்ள கிராமங்களில் நடந்து வந்தது. சமீபத்தில் இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவுபெற்ற நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. இசைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படமாக உருவாகும் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில் இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 31 ஆண்டுகளுக்கு பிறகு பாரதிராஜாவின் படத்திற்கு இளையராஜா இசையமைப்பது
குறிப்பிடத்தக்கது.

The post 31 ஆண்டுகளுக்கு பிறகு இணைந்த இளையராஜா, பாரதிராஜா appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: