அரியலூரில் எஸ்பி தலைமையில் சிறப்பு குறைதீர் முகாம்

 

அரியலூர், ஜூன் 26: அரியலூரில் எஸ்.பி தலைமையில் வாராந்திர சிறப்பு குறைதீர் முகாம் நடைபெற்றது. அரியலூர் மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீர் முகாம் வாரந்தோறும் ஒவ்வொரு புதன்கிழமைகளிலும் நடைபெறுவது வழக்கம். அதன் படி நேற்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் தீபக் சிவாச் தலைமையில் குறைதீர் முகாம் நடைபெற்றது.

அப்போது, அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்த 23 மனுதாரர்கள் தங்கள் குறைகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபக் சிவாச்சிடம் நேரடியாக தெரிவித்து புகார் மனு அளித்தனர். பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்த, காவல் கண்காணிப்பாளர் தீபக் சிவாச், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் முத்தமிழ்செல்வன் ஆகியோர் உடனடியாக பொது மக்களின் மனுக்களின் மீது உரிய மேல்நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.

The post அரியலூரில் எஸ்பி தலைமையில் சிறப்பு குறைதீர் முகாம் appeared first on Dinakaran.

Related Stories: