சேலத்தில் கல்லூரி மாணவியை கத்தியால் குத்தி விட்டு தற்கொலைக்கு முயன்ற இளைஞரால் பரபரப்பு..!!

சேலம்: சேலத்தில் காதல் விவகாரத்தில் கல்லூரி மாணவியை கத்தியால் குத்தி விட்டு தற்கொலைக்கு முயன்ற இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர் மோகன பிரியன் இவர் ஐடிஐ முடித்துவிட்டு தற்போது வேலை தேடி வருகிறார். இவர் சேலம் மாவட்டம் மின்னாம் பள்ளியை சேர்ந்த சூர்யா என்ற பெண்ணுடன் இன்ஸ்டா கிராமில் பழகி உள்ளார். இந்த நிலையில் இன்று காலை மாணவி கல்லூரி செல்வதற்காக சேலம் பழைய பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்தபோது அங்கு வந்த மோகன பிரியன் அவர் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பெண்ணை குத்தினார். பின்னர் அவரும் தற்கொலைக்கு முயன்றார்.

இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அங்கிருந்த பயணிகள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவம் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து இருவரையும் மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வாய்த்த நிலையில் இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, இருவரும் இன்ஸ்டா கிராமில் பழகி வந்த நிலையில் நேரில் சந்திக்காமல் இருந்தகாகவும் பின்னர் நேரில் சந்தித்த போது அந்த மாணவி அவரை பிடிக்கவில்லை என்று நிராகரித்ததாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனால் ஏற்பட்ட மோதல் காரணமாகவே அந்த இளைஞர் கல்லூரி மாணவியை குத்தி தானும் தற்கொலைக்கு முன்றதாக முதற்கட்ட தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும், இது தொடர்பாக போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

The post சேலத்தில் கல்லூரி மாணவியை கத்தியால் குத்தி விட்டு தற்கொலைக்கு முயன்ற இளைஞரால் பரபரப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: