ஒருமாதத்துக்கும் மேலாக சிகிச்சையில் இருந்த போப் ஆண்டவர் பிரான்சிஸ் நலம் பெற்று கடந்த மார்ச் 23ம் தேதி வாடிகன் திரும்பினார். இந்நிலையில் செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் நேற்று நடந்த ஞாயிற்றுக்கிழமை பிரார்த்தனையில் போப் பிரான்சிஸ் கலந்து கொண்டார். சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்த அவர், அங்கு குழுமியிருந்த மக்களை பார்த்து உற்சாகமாக கையசைத்தார். பின்னர் “அனைவருக்கும் ஞாயிற்றுக்கிழமை நல்வாழ்த்துகள்” என தெரிவித்தார்.
The post செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் போப் பிரான்சிஸ் பிரார்த்தனை appeared first on Dinakaran.